ராணிபேட்டையில் ஆம்புலன்ஸில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்..! - Seithipunal
Seithipunal


பிரசவத்திற்காக மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் மேட்டுநாகலேரி கிராமத்தை சேர்ந்தவர் சகுந்தலா. நிறை மாத கர்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் அருகில் இருந்த வளையாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சகுந்தலாவை மருத்தவர்கள் பரிசோதித்து விட்டு மேற்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இந்நிலையில், சகுந்தலா ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார்.

செல்லும் வழியிலேயே பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் வழியில் நிறுத்தப்பட்டு மருத்துவ உதவியாளர் வெங்கட்ராமன் மற்றும் செவிலியர் ஜிலானி ஆகிய இருவராலும் பிரசவம்.பார்க்கபட்டது, இதில் சகுந்தலாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து சகுந்தாலாவையும் குழந்தையையும் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்க்கபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranipet Woman Delivery On Ambulance 3 August 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->