மகளுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி, தந்தை செய்த படுபாதக செயல்.. இளம்பெண் துடிதுடித்து மரணம்.!
Ramanathapuram Father in Mature Activity Daughter Death 20 Feb 2021
டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகளுக்கு மருத்துவம் பார்க்காமல், பேய் பிடித்து உள்ளது என்று கூறி கோடாங்கியிடம் அழைத்துச் சென்று பெண்மணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உச்சிப்புளி கோரவள்ளி கிராமத்தைச் சார்ந்தவர் வீர செல்வம். இவரது மனைவி கவிதா கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்னதாக தற்கொலை செய்து இறந்துள்ளார். இதனையடுத்து வீரச்செல்வம் கோபிநாத் என்ற மகன், கல்லூரியில் மூன்றாம் வருடம் பயின்று வந்த தாரணி என்ற மகளுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே செல்வத்தின் வீட்டில் இருந்த ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவை அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், அதற்கு தற்கொலை செய்த தனது மனைவியின் ஆவி காரணம் என்று வீர செல்வம் எண்ணியுள்ளார். இதனால் பயத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், மகள் தாராணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், திருப்பாலைக்குடி அருகே இருக்கும் கோடங்கியிடம் அழைத்துச் சென்று பெண் பூசாரியிடம் பேயை விரட்டக்கூறி முறையிட்டுள்ளார். காய்ச்சலால் தவித்த தாரணியை சாட்டையால் அடித்து கொடுமைப்படுத்திய நிலையில், மயங்கிய விழுந்த தாரணியின் மூக்கில் மிளகாய் வற்றலை சுட்டு ஆவியை விரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னரும் தாராணிக்கு மயக்கம் தெளியாத நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, தாராணிக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பது உறுதியானதால், மாத்திரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதன்பின்னர், கடுமையான உடல்நலக்குறைவு ஏற்படவே, அப்போதும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் கோடங்கியிடம் அழைத்து செல்ல முயற்சிக்கவே தாரணி மயங்கியுள்ளார். அவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Ramanathapuram Father in Mature Activity Daughter Death 20 Feb 2021