இராசபாளையம் மக்களை கண்ணீர் துயரத்திற்கு உள்ளாக்கிய, முன்னாள் சேர்மன்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் மாவட்ட வாரியான பாதிப்புகள், கடந்த சில வாரமாக கடுமையான அளவு உச்சம் பெற்றுள்ளது. 

தமிழகத்தின் கொரோனா பாதிப்பை பொறுத்த வரையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,20,663 ஆக உயர்ந்துள்ளது. 1,62,691 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,302 ஆக உயர்ந்துள்ளது. 2,321 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

திடீரென அம்மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா உச்சத்தால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் இராசபாளையம் நகராட்சி முன்னாள் சேர்மன் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். 

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் பலருக்கும் கொரோனா உறுதியாகிருந்த நிலையில், களப்பணியில் ஈடுபட்ட முன்னாள் நகராட்சி சேர்மன் தனலட்சுமிக்கும் கொரோனா உறுதியானது. இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில், நேற்று கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் இளைப்பு காரணமாக அவதியுற்று, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த செய்தி இராசபாளையம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajapalayam Municipality Ex Chairman passed away due to corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->