#சற்றுமுன்: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை!
rain alert in tn 8 districts oct 29
சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக தெரிவித்து. தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்து உள்ளதாகவே தெரிகிறது.
மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. வரும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உழைத்த 8 மாவட்டங்களில் வரும் 24 மணிநேரத்துக்கு கனமழை தொடரும் என்று தெரிவித்துள்ளது.
English Summary
rain alert in tn 8 districts oct 29