மதுபோதையில் தகராறு.. கழுத்தறுத்து, கல்லைப்போட்டு கொடூர கொலை.. புதுக்கோட்டையில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையில் மதுபோதையில் வாலிபர் மதுபாட்டிலால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அய்யனாபுரம் பகுதியை சார்ந்தவர் கணேஷ்குமார். 

அதே பகுதியில் உள்ள போஸ் நகர் பகுதியை சார்ந்தவர் தமிழரசன். இவர்கள் இருவரும் மதுபானம் வாங்கிவிட்டு, பாழடைந்த மண்டபத்தில் மது அருந்தியுள்ளனர். இந்த நேரத்தில், இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த தகராறு அடிதடியாக மாறி தமிழரசனின் தலைமையில் கணேஷ்குமாரின் கழுத்து பாட்டிலால் அறுத்து கொலை செய்யப்பட்டு, தலையில் கல்லைப்போட்டு கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தமிழரசன் தப்பி சென்றுள்ளான். 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, கணேஷ்குமாரின் உடலை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல முற்பட்டனர். இதனை அறிந்து அங்கு வந்த உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவே, லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், குற்றவாளி தமிழரசனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி காவல் துறையினர் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puthukottai youngster murder police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->