பெண்ணை கர்ப்பிணியாக்கி தலைமறைவான காதலன்... காவல் நிலையத்தில் திருமணம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியை சார்ந்தவர் பிரபு. இதே கிராமத்தில் உள்ள வடக்குப்பட்டி பகுதியை சார்ந்தவர் புனிதா. இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், காதலன் பிரபுவின் ஆசைக்கு புனிதா அவ்வப்போது இணங்கியதாக தெரியவருகிறது. இந்த விஷயத்தின் காரணமாக புனிதா கர்பிணியாகவே, இந்த விஷயத்தை காதலனிடம் தெரிவித்து திருமணம் செய்யக்கூறி கூறியுள்ளார். 

இவர்களின் காதல் வாழ்க்கைக்கு பிரபுவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த மாதத்தின் போது பிரபு தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து பெண்ணின் சார்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர், வடக்காட்டில் வசித்து வந்த பிரபுவை கைது செய்தனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, திருமணத்திற்கு சம்மதம் வாங்கப்பட்டுள்ளது. பின்னர் வடகாடு காவல் நிலையத்தில் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், காவல்துறையினர் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthukottai girl married her love boy after pregnancy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->