#தமிழகம் || மருத்துவமனையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை.!  - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ந்து வரும் இந்த நவீன உலகத்தில் பெண்பிள்ளைகளை கவர்ச்சி காட்சி பொருளாக காட்டி வரும் சினிமா துறை காரணமாக இந்த அத்து மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த சினிமா துறையால் தான் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான பாலியல் அத்துமீறல்கள் உலகம் முழுவதுமே அதிகரித்து வருகிறது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.  

தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த மாதம் பாலியல் தொல்லை காரணமாக, பள்ளி மாணவிகள் 3 பேர் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதா? என்று எண்ணும் அளவிற்கு அச்சம் உண்டாக்கிய போதே, கடந்த வாரம் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை காரணமாக மேம்பாலத்தின் மீது இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக பெண் ஊழியர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட அந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pudukottai young women abused and murder


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->