ஸ்தம்பித்து போன செங்கல்பட்டு.,! கடும் வாகன போக்குவரத்து நெரிசல்.! - Seithipunal
Seithipunal


பொங்கல் விடுமுறையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய மக்களின் கூட்டத்தினால் செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் வாகனங்கள் வரிசைகட்டி நின்று கொண்டிருக்கின்றன.

நான்கு நாட்கள் பொங்கல் விடுமுறைக்காக சென்னையிலிருந்து தமிழத்தில் உள்ள அனைத்து அனைத்து பகுதியிலும் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு மக்கள் அனைவரும் சென்றிருந்தனர். இதனால் சென்னை வெறிச்சோடி இருந்தது.

இந்நிலையில், பொங்கல் விடுமுறை நாட்கள் முடிந்து மீண்டும் பணிக்காக மக்கள் இன்று காலை முதலே திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். தங்களது சொந்த வாகனங்களிலும், அரசு பேருந்து, தனியார் பேருந்துகள் மூலமும் மக்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

இதன்காரணமாக சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் விக்ரவாண்டி சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் வாணியம்பாடி அருகே உள்ள சுங்கச்சாவடி கடக்கவும் ஏகப்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

அதேபோல் முக்கியமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pongal holyday over


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->