குடும்பத்தை பிரிந்து வந்தவர், துடிதுடிக்க பலியான சோகம்.. பணப்பிரச்சனையில் அடித்தே கொலை செய்த பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆம்பூர் சாலையில் இருக்கும் தங்கு விடுதி அருகே, கடந்த 14 ஆம் தேதி 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி பிணமாக இருந்தார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில், அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ததில், அவர் வாகன விபத்தில் இறக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும், சந்தேகத்திற்கு இடமாக மற்றொரு வாகனம் நிற்கவே, அந்த வாகனத்தின் பதிவெண் கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியை சார்ந்த ஐயப்பன் (வயது 45) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்தனர்.

குடும்பத்தகராறில் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து புதுச்சேரிக்கு வந்த ஐயப்பன், சேதாரப்பட்டு பகுதியில் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளார். சுமை தூக்குவோர் சங்கம் அருகே இரவு வேளைகளில் படுத்து உறங்கி வந்த நிலையில், மொத்த வியாபாரம் செய்யும் பெண்ணிடம், கொய்யாப்பழம் வாங்கி விற்பனை செய்துள்ளார். ஆனால், அதற்கான பணத்தை கொடுக்காமல் இருந்து வந்துள்ளதாக தெரியவருகிறது.

இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, இருவர் சேர்ந்து ஐயப்பனை அடித்த நிலையில், அக்கம் பக்கத்தினர் தடுத்து விட்டுள்ளனர். ஆனால், ஆத்திரம் தீராத பெண்மணி மற்றும் அவரை சார்ந்த இரண்டு பேர் சேர்த்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry Murder Police Investigation Report Feeling Sad


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->