ரேஷன் கார்டுக்காக கோரிக்கை வைத்தவருக்கு, ரூ.2000 நிதிஉதவி அளித்த தர்மபுரி பாமக எம்.எல்.ஏ.!!
PMK Dharmapuri MLA SP Vengadeswaran Help Youngster Did not Receive Ration Card 26 May 2021
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேடியப்பன்திட்டு பகுதியை சார்ந்தவர் நவீன்குமார். இவர் கடந்த 2 வருடமாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், இரண்டு வருடமாக குடும்ப அட்டை வரவில்லை. இதனால் நவீன் குமாருக்கு தமிழக அரசின் குடும்ப அட்டைகளுக்கான நிதிஉதவி வரவில்லை.
இந்நிலையில், நவீன்குமார் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன் அவர்களை நேரில் சந்தித்து, தனது பிரச்சனைகளை கூறியுள்ளார். மேலும், ஊரடங்கால் ஏற்கனவே வருமானம் இல்லாமல் தவித்து வருவதாகவும், ரேஷன் அட்டை இல்லை என்பதால் தமிழக அரசின் ரேஷன் அட்டைக்கான உதவித்தொகை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தர்மபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், தனது சட்டைப்பையில் இருந்த ரூ.2 ஆயிரத்தை வழங்கி, இதனை தற்போதைக்கு வைத்துக்கொள்ளுமாறும், விரைவில் குடும்ப அட்டை வழங்க தேவையான ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதியளித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரனின் செயல் பெரும் நெகிழ்ச்சியை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த 15 க்கும் மேற்பட்ட நாட்களாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை-எளிய, ஆதரவற்ற மக்களுக்கு அவர் இலவசமாக உணவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்திருந்த பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் பேசுகையில், எஸ்.பி வெங்கடேஸ்வரனின் எளிமை மற்றும் பண்பு, உதவி செய்யும் மனப்பான்மையை எடுத்துரைத்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குரலைக்கூட உயர்த்தி பேசாத பண்பான வேட்பாளர்... தர்மபுரியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்..!
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
PMK Dharmapuri MLA SP Vengadeswaran Help Youngster Did not Receive Ration Card 26 May 2021