கடலூர் அருகே பரிதாபம்.! மின்சாரம் தாக்கி பிளம்பர் பலி.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி பிளம்பர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வில்வநகர் பகுதியில் சேர்ந்தவர் பிளம்பர் பீட்டர் (45). இவரது மனைவி பீனா தாமஸ். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பிளம்பர் வேலைக்காக பீட்டர் திருப்பாதிபுலியூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றார். அப்பொழுது வீட்டின் இரண்டாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்கம்பி பீட்டர் மீது உரசியதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். 

இதையடுத்து உடனடியாக பீட்டர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீட்டர், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பாதிபுலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Plumber killed by electrocution in Cuddalore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->