நிலத்தகறாரை மனதில் வைத்து பெண் பாலியல் பலாத்கார முயற்சி.. பெரம்பலூரில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை பூஞ்சோலை பகுதியை சார்ந்தவர் ஜோசப். இவரது மனைவி அன்னமேரி. இவரது மகள் பிரியா (வயது 26). இவர் பெங்களூரில் ஹோம் நர்சிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். 

கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்த நிலையில், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர்களின் குடும்பத்தினருக்கும், அப்பகுதியை சார்ந்த செங்கோடன் - மல்லிகா என்ற குடும்பத்தினருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. 

இந்த நிலையில், செங்கோடகன் மகன் சின்னண்ணன், பிரியாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், கழிவறைக்கு பிரியா செல்லும் போது புகைப்படம் எடுக்க முயற்சி செய்ததாக தெரியவருகிறது. மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும் தெரியவருகிறது. 

இந்த விஷயம் தொடர்பாக திருச்சி டி.ஐ.ஜி ஆணி விஜயாவிடம் பெண்மணி புகார் அளித்துள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur girl sexual abuse attempt due to land problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->