ரேஷன் கார்டில் திருத்தம் வேண்டுமா? நாளை (11.02.2023) மக்கள் குறைதீர் முகாம்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகின்றது . பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழகம் முழுவதும் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த குறைதீர் முகாம்களில் ரேஷன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் மக்கள் தங்கள் குறைகளை கூறுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

People's Grievance Camp tomorrow in Chennai


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->