பிரதமரை வரவேற்றதில் அரசியலா..? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!
Palanivel thiagarajan speech
மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு தொடர்பாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், அரசு சார்பில் மதுரை வந்த பிரதமர் மோடியை வரவேற்கச் சென்றேன். முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் கொடுத்த அரசாங்க உத்தரவைத்தான் நான் செய்தேன்.
இது அரசாங்கத்தின் பணி தான்.இதில் தனிநபர் விருப்பமோ அரசியலோ எதுவும் கிடையாது. பிரதமருக்கும் எனக்கும் தனிப்பட்ட உறவு போல் சிலர் போலி செய்திகளை பரப்புகின்றனர்.
அந்த வதந்தியை யாரும் கருத்தில் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
English Summary
Palanivel thiagarajan speech