மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரின் மகன் பெயிண்டர் பிரான்சிஸ் (28). இவர் இன்று காலை வடலூர் கும்பகோணம் சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கிருந்த உயிர் மின்னழுத்த கம்பியை கவனிக்காமல், குனிந்து நிமிர்ந்த போது எதிர்பாராத விதமாக பிரான்சிஸ் தலையில் மின்கம்பி உரசியதில், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதில் பிரான்சிஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வடலூர் காவல்துறையினர், உயிரிழந்த பிரான்சிஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Painter killed by electrocution


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->