அனைத்து பாவங்களை நீக்கும் சோப்பு ''மோடி சோப்பு'' - ப.சிதம்பரம் கடும் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


ஊழல் குற்றச்சாட்டுகளை கொண்டவர்கள் 'மோடி சோப்பு' பயன்படுத்தி பாவங்களை நீக்கி சுத்தமாக்கி விடுவதாக முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சிவகங்கை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியிருப்பதாவது, பா.ஜ.கவின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எந்த ஒரு வழக்கமும் கிடையாது. 

யாரும் சிறையில் இல்லை. பா.ஜ.கவினர் அனைவரும் உத்தமர்கள். எதிர்க்கட்சியினர் எல்லோரும் அயோக்கியர்களா? இங்கிருந்து யாராவது அங்கு சென்றால் மோடி சோப்பு மூலமாக சுத்தப்படுத்தி அவர்களை புனிதமாக்குகிறார்கள். அது எப்படி? 

இந்தியாவில் மிகப் பிரபலமாக அனைவரும் பயன்படுத்துவது மோடி சோப் தான். அந்த சோப்பை பயன்படுத்தினால் அனைத்து குற்றச்சாட்டுகளும் பாவங்களும் நீங்கி புனிதமாகி விடலாம் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

P Chidambaram criticism Modi 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->