அவர்களின் செயல் நெகிழ்ச்சி அளிக்கிறது! ஓபிஎஸ் போட்ட ட்வீட்!
ops twit about lady inspector
இந்திய நாட்டின் 74-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதேபோல் மாவட்டம் தோறும் சுதந்திர தின விழா விடப்பட்டது.
இதில் நெல்லை வ.உ.சி.மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா அணிவகுப்பை ஆயுதப்படை பெண் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையேற்று நடத்தினார். ஆய்வாளர் மகேஸ்வரி தந்தை நாராயணசாமி நேற்று முந்தினம் இரவு 8 மணி அளவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தந்தை உயிரிழந்த செய்தியை யாரிடமும் கூறாமல் சுதந்திர தின விழா அணிவகுப்பை நடத்தினார்.
சுதந்திர தின விழா நிகழ்ச்சி முடிந்த பின், உடனடியாக தந்தை இறுதி சடங்கில் கலந்து கொள்ள திண்டுக்கல்லுக்கு ஆய்வாளர் மகேஸ்வரி புறப்பட்டு சென்றார். தந்தை உயிரிழப்பின் போது கூட தன கடமை தவறாமல் அவர் நடந்து கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், நெல்லை ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்களது தந்தையின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் அந்த பதிவில், "தனது தந்தை இறந்த துக்கத்திலும் சுதந்திர தினவிழாவில், கடமையை நிறைவேற்ற அணிவகுப்பை முன்னின்று நடத்திய காவலர் மகேஸ்வரி அவர்களின் செயல் நெகிழ்ச்சி அளிக்கிறது" என்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
English Summary
ops twit about lady inspector