திண்டுக்கல் || அரசு பேருந்து மீது மோதிய இருசக்கர வாகனம்.. ஒருவர் பரிதாப பலி..!
one person Death in Accident
அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனம் ஒன்று அரசு பேருந்தின் மீது மோதியது. அரசு பேருந்து இதில், திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
one person Death in Accident