பட்டாசு ஆலை வெடிவிபத்து - மேலும் ஒருவர் கைது.!
one more person arrested for viruthunagar firecrachers factry accident
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே ராமுதேவன்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பட்டாசு ஆலையின் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கில் நேற்று பட்டாசு ஆலையின் போர்மேன் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று ஆலையின் மேலாளர் ஜெயபாலன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து போலீசார் தலைமறைவாக உள்ள ஆலையின் உரிமையாளர் விக்னேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
one more person arrested for viruthunagar firecrachers factry accident