#Breaking || காமுகன் 'காசி' வழக்கில் திடீர் திருப்பம்.! இன்று காலை சென்னை கல்லூரி மாணவி கொடுத்த புகாரால் பெரும் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலை சார்ந்த காமுகன் காசி, இளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்து பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டான். இப்போது சிறையில் கம்பிஎண்ணிக்கொண்டு இருக்கும் நிலையில், எப்படியாவது ஜாமீன் மூலமாக வெளியே வந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறான். 

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் உள்ள பெண்களிடம் பழகி மோசடியில் ஈடுபட்ட நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்து இருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சிபிசிஐடி போலீசாரிடம் காசி மீது புகார் அளித்துள்ளார்.

மாணவியின் அந்த புகாரின் பேரில் காசி மீது பலாத்கார வழக்கை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக காசியிடம் விசாரணை நடத்த டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட ஏற்கனவே 4 பேர் காசி மீது புகார் அளித்திருந்த நிலையில் மேலும் ஒரு பெண் வழக்கு தொடர்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one more case file in kasi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->