கடலூர் - தாய் கண்முன்னே மகன் தலையில் ஏறிய வேன் சக்கரம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்தவர்கள் சவுந்தர்-வசந்தி தம்பதியினர். இவர்களுக்கு நவீன்குமார், ரக்க்ஷன் என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் நவீன்குமார் காடாம்புலியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு வேனில் சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில், நவீன்குமாரை நேற்று காலை தாய் வசந்தி பள்ளி வேனில் ஏற்றி விடுவதற்காக சென்றுள்ளார். அப்போது, சிறுவன் ரக்க்ஷன் வேனுக்கு அடியில் புகுந்துவிட்டார். இதனை வேன் ஓட்டுநர் கவனிக்காமல் வேனை இயக்கியதால், வேன் சக்கரம் ரக்க்ஷனின் தலை மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தன் கண் முன்னே குழந்தை துடிதுடித்து இறந்ததை பார்த்து பேரதிர்ச்சி அடைந்த வசந்தி கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான ரக்ஷனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை தலை நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one and half age boy died in cuddalore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->