மூதாட்டி என்றும் பாராமல் துடிதுடிக்க அரங்கேறிய கொடூரம்.! சென்னை அருகே கொடூரம்.!
old women killed
தற்போதைய காலக்கட்டத்தில், கொலை என்பது அடிக்கடி கேட்டு பழக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தாத ஒரு சொல்லாகவே மாறி போய் இருக்கின்றது. ஒன்றுமில்லாத விரோதம், கொலை என மனிதன் ஆத்திரத்திற்கு பஞ்சமில்லாத ஒன்றாக இருக்கின்றது.
சென்னை அருகே, கொடுங்கையூரில் 68 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரை 34 வயதுடைய வாலிபர் ஒருவர் பாட்டி என அழைத்துள்ளார். இது அந்த மூதாட்டிக்கு பிடிக்காததால், கண்டித்ததால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் விமலா கோவிந்தராஜன்(68) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் அவருடைய வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விமலாவின் வீட்டில் குடியிருந்து வந்த வெல்டர் சுதாகர் (34) என்பவர் கைது செய்யப்ட்டு இருக்கின்றார்.
காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் நான் விமலாவை பாட்டி என அழைத்ததால் ஆத்திரமடைந்த விமலா, சுதாகரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் ஆதனால் அவமானத்திற்கு ஆளான சுதாகர் விமலாவை கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.