சீர்காழி: வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


சீர்காழியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி ருக்மணி (80). இவர்களது இரண்டு மகள்கள் அதே பகுதியில் திருமணமாகி வசித்து வருகின்றனர். மேலும் நடராஜன் இறந்து விட்டதால் ருக்மணி தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், ருக்மணியின் வீட்டின் சுவர் சேதமடைந்து இருந்துள்ளது. இதையடுத்து வீட்டில் படுத்து கொண்டிருந்த ருக்மணி மீது இன்று அதிகாலை வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இதில் ருக்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து வழக்கம்போல் ருக்மணிக்கு உணவு கொடுப்பதற்காக அவரது மகள் வீட்டின் கதவை திறந்த போது, தாய் வீட்டின் சுவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old woman dies after house wall collapsed in


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->