மேம்பாலத்தில் இருந்து கீழே எட்டிபார்த்த முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் மேம்பாலத்தில் இருந்து கீழே எட்டிபார்த்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் சாலபோகம் தெருவை சேர்ந்தவர் துறை (71). இவர் பொன்னேரிக்கரை புதிய மேம்பாலத்தில் இருந்து கீழே எட்டிப் பார்த்தபோது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனே துரையை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old man dies after falling from bridge in kanchipuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->