தண்ணீர் தொட்டிலில் சடலமாக மீட்கபட்ட பச்சிளம் குழந்தை.. தாயே வீசி சென்றது தெரியவந்தது..! - Seithipunal
Seithipunal


பெற்ற குழந்தையை கொலை செய்த தாயிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை திருப்பரங்குன்றம் பல்லர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மஹாராஜா. இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். பிறந்து 38 நாட்களான பச்சிளம் குழந்தை கடந்த 15ம் தேதி அருகில் உள்ள வீட்டின் மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியிலிருந்து பிணமாக மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.குழந்தையை தாயே குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசியது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் குழந்தை அருகில் தூங்க வைத்து விட்டு, தானும் தூங்கியதாகவும் அப்போது குழந்தை மீது சாய்ந்து தூங்கியதால் மூச்சு திணறி உயிரிழந்தாக தெரிவித்தார்.

இது கணவருக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என நினைத்து  மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தையை வீசிவிட்டதாகவும் தெரிவித்தார். இந்த வாக்குமூலத்தை அடுத்து, குழந்தை உள்நோகத்துடன் கொலைச் செய்யப்பட்டதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.x


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new born baby death Near madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->