சந்தேகத்தால் கர்ப்பிணியை வயிற்றில் உதைத்து கொன்ற கணவர் கைது.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வபாண்டியன். இவர் மனவைி பாரதி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, முதல் கணவர் பிரிந்து சென்ற நிலையில், இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

தற்போது பாரதி நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். இதற்கிடையே பாரதியின் நடத்தையில் செல்வபாண்டியனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தேகத்தால், பாரதியின் கர்ப்பத்திற்கும், தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று தகராறு செய்ததுடன் கருவை கலைத்து விடும்படி தெரிவித்துள்ளார். ஆனால், பாரதி கருவை கலைப்பதற்கு மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வபாண்டியன் பாரதியை கீழே தள்ளி விட்டு அவரது அடிவயிற்றில் காலால் எட்டி உதைத்து கருவை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் பாரதிக்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டது. 

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பாரதியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வபாண்டியனை கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near vizhupuram pregnent wife died for husband kicks in stomak


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->