சின்ன சேலம் அருகே கல்லூரிக்குச் சென்ற மாணவி திடீர் மாயம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் கிருஷ்ணராஜ் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சின்னசேலம் அடுத்துள்ள இந்திலி கிராமத்தில் தனது பெரியம்மா வீட்டில் தங்கி, படித்து வந்தார். 

இதையடுத்து, இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்வதற்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, வருகிற 27-ந்தேதி திங்கள்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. 

இந்த நிலையில், கல்லூரிக்கு சென்ற மாணவி, பின்னர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் மாணவி வராததனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இதனால், பதறிப்போன மாணவியின் உறவினர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near salem college student missing


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->