வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற இளம்பெண்...நடந்தது என்ன?... - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் மகள் பிரவீனா. இவருக்கும் மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் தெற்குவெளியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் நடராஜன் என்பவருக்கும் கடந்த 2021-ஆம் ஆண்டு திருமணமான நிலையில், அன்பழகன் தனது மகளுக்கு 24 பவுன் நகை, டூவீலர் மற்றும் சீர்வரிசையுடன் திருமணம் செய்து கொடுத்துள்ளார். 

திருமணமாகி இருவரும் மூன்று மாதம் சேர்ந்து வாழ்ந்த நிலையில், மேலும் வரதட்சனை கேட்டு நடராஜன் குடும்பத்தினர் பிரவீனாவை துன்புறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து, நடராஜன் வேலைக்காக சென்னை சென்று நிலையில் அவரது தம்பி சதீஷ், பிரவீனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நடராஜன் குடும்பத்தினர்கள் பிரவீனாவை வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டு வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர். திருமணமாகி இதுவரை ஒன்றரை ஆண்டு ஆன நிலையில், தன்னை கணவருடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என்று பிரவீனா நடராஜன் வீட்டு வாசலில் 20 நாளாக படுத்து உறங்கி வந்தார். 

இதுகுறித்து, கிராம மக்கள் பேசியும் நடராஜன் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாததால், நேற்று பிரவீனா பொதுமக்களுடன் சென்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். 

அதன் பின்னர் தன்னை வீட்டின் உள்ளே விடாததால் கோபமடைந்த பிரவீனா, நேற்று இரவு பொதுமக்கள் முன்னிலையில் நடராஜன் வீட்டு கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்றார். இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mayiladuthurai lady broke in house door


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->