கொடைக்கானலில் மர்ம முறையில் தனியார் ஊழியர் உயிரிழப்பு.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திஜி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். பி.காம். சி.ஏ. படித்துள்ள இவர் கடலூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் மனைவி அம்பிகா. இவர்களுக்கு சில ஆண்டுகளாக குழந்தை இல்லை என்பதனால், கடந்த 2015-ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து செய்துக்கொண்டனர். 

இதனால், மனமுடைந்த மணிகண்டன் தனது அண்ணன் முத்துச்சாமி வீட்டிலேயே சில காலமாக வாழ்ந்து வந்தார். அதிலிருந்து வேலைக்கு செல்லாமல் இருந்த அவருக்கு வீட்டில் இருந்தவர்கள் அறிவுரை வழங்கி வந்தனர். 

இந்நிலையில் கடந்த 8ந் தேதி வேலை தேடி செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து சென்றார். அதன்பிறகு அவரிடம் இருந்து எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று கொடைக்கானல் பூம்பாறை அருகில் உள்ள கைகாட்டி பகுதியில் நிர்வாணமாக ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

அப்போது அந்த நபர் அணிந்திருந்த உடைகள் மற்றும் ஏ.டி.எம். கார்டு போன்றவற்றை வைத்து விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தது மணிகண்டன் என்பது தெரிய வந்தது. அவர் எவ்வாறு உயிரிழந்தார்? என்பது தெரியவில்லை. 

இது குறித்த தகவல் பிரேத பரிசோதனைக்கு பிறகே முடிவுகள் தெரியும் என்று துணை தலைமை காவலர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kodaikaanal private company employee died


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->