காஞ்சிபுரம் : பாழடைந்த கிணற்றில் மிதந்த தனியார் நிறுவன ஊழியர் உடல் மீட்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அண்ணா நகரை சேரந்த சேகர் மகன் அருண்குமார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே அமரம்பேடு பகுதியில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். 

வழக்கம் போல், கடந்த 4-ந்தேதி பணிக்கு சென்ற இவர் பலமணி நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி, போலீசார் அருண்குமாரின் செல்போன் எண்ணை வைத்து தேடியதில், அது, காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி இருப்பதாக காட்டியது. அதன் படி, அந்த பகுதியில் உள்ள அனைத்து இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. 

இந்நிலையில், போலீசார் மீண்டும் செல்போன் எண் சிக்னலை வைத்து தேடிய போது மீண்டும் அதே அந்த பகுதியை காட்டியதால், போலீசார் அந்த பகுதிக்குச் சென்று தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது அந்த இடத்தில் பாழடைந்த கிணறு ஒன்று இருந்தது. 

இதைப்பார்த்து சந்தேகமடைந்த போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர் கிணற்றில் இறங்கி, மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்குப் பிறகு அருண்குமாரின் உடலை மீட்டனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kanchipuram private company employee body rescue on well


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->