மனைவி மற்றும் மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி கைது.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் அடுத்து குமராட்சி அருகே தெம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். பிரபல ரவுடியான இவர், கடந்த பதினைந்து ஆண்டுக்கு முன்பு  பாரதி பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கனவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாரதிபிரியாவின் தாய் இந்திரா என்பவர், நேற்று முன்தினம் இரவு தனது மகளை பார்ப்பதற்காக புறப்பட்டு வந்தார். 

அங்கு, இந்திரா மருமகன் ஜெயசங்கரிடம் குடும்ப பிரச்சினை குறித்து விசாரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயசங்கர், தனது மனைவி பாரதிபிரியாவையும், மாமியார் இந்திராவையும் ஆபாசமாக திட்டி, காலால் உதைத்துள்ளார். 

இதையடுத்து, இந்திரா, தனது மகள் பாரதிபிரியவை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டுத் சென்றார். இதனால், அதிக ஆத்திரமடைந்த ஜெயசங்கர், காரில் அவர்களை பின்தொடர்ந்து சென்று இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். 

இதைத் தொடர்ந்து, பாரதிபிரியா சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசங்கரை கைது செய்து, அவருடைய காரையும் பறிமுதல் செய்தனர். 

அதன் பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீது கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், கடலூர் மாவட்ட ரவுடிகள் பட்டியலில் ஜெயசங்கரும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near cuddalore famous rowdy arrested for threat wife and mother in law


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->