என் மீது தப்பு இல்லை.. காவல் நிலையத்தில் விசாரணைக்குச் சென்ற பெயிண்டர் மயங்கி விழுந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெடுங்குன்றம் ஊராட்சி கொளப்பாக்கம் அழகேசன் நகரைச் சேர்ந்தவர் சங்கர். பெயிண்டரான இவருக்கும் கொளப்பாக்கத்தில் உள்ள சிவன் கோவில் நிர்வாகிகளுக்கும் இடையே கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. 

இந்த தகராறு தொடர்பாக கோவில் நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் சங்கரை விசாரணைக்காக காவல் நிலையதிற்கு வரும்படி அழைத்தனர். அதன் படி, சங்கர் மது போதையில் காவல் நிலையத்திற்குச் சென்றார். 

அங்கு அவர், "என் மீது கோவில் நிர்வாகிகள் தவறான புகார் தெரிவித்துள்ளனர். இதனால் நான் விஷம் குடித்து விட்டேன்" என்று போலீசாரிடம் தெரிவித்து விட்டு மயங்கி கீழே சரிந்து விழுந்தார். 

இதைப்பார்த்த போலீசார் சங்கரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கர் காவல் நிலைய வாசலில் வந்து விஷம் குடித்து உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chengalpattu painter sucide in police station


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->