2 மாத ஊதியம் தராத சுங்கச்சாவடி.. அடித்து நொறுக்கிய தொழிலாளி.!
Namakkal Toll Gate Employees Protest 2 Month Salary Settlement
இராசாம்பாளையத்தில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடி மையத்தில், ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளம் கொடுக்கவில்லை என்பதால், ஊழியர்கள் அறையை உடைத்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இராசாம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சுங்கச்சாவடி கட்டண மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 77 பேர் பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு கடந்த 2 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஊழியர்கள் கோரிக்கை வைத்தும் பலனில்லை என்றும் தெரியவருகிறது. இந்த நிலையில், ஊதியம் கேட்டு பார்த்து கிடைக்காமல் ஆத்திரத்தில், நிறுவனத்தின் மேற்பார்வையாளர் வெங்கடேஷ் என்பவர் தொழிலாளர்கள் ஓய்வு எடுக்க கூடிய அறையில் இருக்கும் கற்களாலான இருக்கையை கடப்பாறையை கொண்டு உடைக்கும் வீடியோ காட்சியானது வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Namakkal Toll Gate Employees Protest 2 Month Salary Settlement