#தமிழகம் || அடகு கடை சுவற்றில் ஓட்டையை போட்டு, ஆட்டையைப்போட்ட மர்ம கும்பல்.!  - Seithipunal
Seithipunal


நாமக்கல் அருகே அடகு கடை சுவரில் துளையிட்டு 13 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க நகை கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பவித்திரம் பகுதியில் அமைந்துள்ள பாலாஜி என்பவரின் அடகு கடையில், நேற்று நள்ளிரவு வந்த 5 பேர் கொண்ட கும்பல் மாடி மீது ஏறி, அங்கு சுவற்றில் துளையிட்டு கடைக்குள் புகுந்தனர்.

பின்னர் அந்த கடையில் இருந்த 13 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கொள்ளையடித்தது போதாது என்று நினைத்த கொள்ளையர்கள், அடகுக் கடையில் உள்ள லாக்கரை உடைக்க முயற்சித்தபோது, சத்தம் வந்துள்ளது.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக வரவே, இதனை பார்த்த மர்ம கொள்ளை கும்பல் தப்பி ஓடி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்டமாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

namakkal pavithram robbery


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->