நான்காவது மாடியில் இருந்து குதித்து செவிலியர் தற்கொலை.. நாமக்கல்லில் சோகம்.!!
Namakkal girl nurse suicide in hospital
தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த பெண்மணி, நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சோகம் பெரும் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது.
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பகுதியை சார்ந்தவர் பிரியதர்சினி. இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல பணி முடிந்ததும், திடீரென மருத்துவமனையின் நான்காவது மாடிக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளவே, பிரியதர்சினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இவரை மீட்ட மருத்துவமனை ஊழியர்கள் சோதனை செய்ததில் இவர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், பிரியதர்சினி மேல் படிப்பை துவங்கவுள்ளதால், வரும் மாதத்தில் இருந்து பணிக்கு வரமாட்டேன் என்று தெரிவித்ததாக நிர்வாகம் கூறியுள்ளது. இருப்பினும், காவல் துறையினர் இளம்பெண்ணின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Namakkal girl nurse suicide in hospital