லோக்கல் ரவுடியின் வீச்சரிவாள் மிரட்டல்.. விரைந்த காவல்துறை.. வேட்டி அவிழ்ந்து ஓடிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


மோகனூர் பகுதியில் அப்பகுதியில் ரவுடி என்று கூறிக்கொண்டு மக்களை மிரட்டி வந்த நபர், வீச்சருவாளுடன் மிரட்டல் விடுப்பது தொடர்பான பகீர் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் தெற்குத்தெரு பகுதியை சார்ந்தவர் விக்ரம். இவர் நேற்று அங்குள்ள மோகனூர் பேருந்து நிலையத்தில் இருந்து சோழிய முதலி தெரு வழியாக தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மேலும், அங்குள்ள நபர்களை வாகனத்தில் இடிப்பது போல வித்தை காண்பித்து சென்றுள்ளார். 

இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் விக்ரமை தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விக்ரம், தனது இல்லத்திற்கு சென்று வீச்சருவாளை எடுத்து வந்து தகராறில் ஈடுபட்டுள்ளான். இதன்பின்னர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, காவல்துறையினர் வந்ததும் வீச்சருவாளை போட்டுவிட்டு வீரவசனம் பேசியதுடன் தப்பியோடியுள்ளான். விக்ரமை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal culprit escape police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->