தாயுடன் இருந்த சிறுமி.. நடுவீதியில் கீழே தள்ளி அத்துமீறிய கொடூரன்.. குடிகார பொறுக்கியால் அரங்கேறிய அவலம்.!!
Namakkal child girl sexual torture police investigation
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் ஆத்தனூர் அம்மன் கோவில் எம்.ஜி.ஆர். காலனி பகுதியை சார்ந்தவர் மோகனா. இவர் அங்குள்ள பொதுகுடிநீர் குழாயில் தண்ணீர் இடித்து கொண்டு இருந்துள்ளார்.
இவருடன், இவரது 8 ஆம் வகுப்பு பயின்று வரும் 12 வயதுடைய மகளும் தண்ணீர் பிடிக்க உடன் சென்றுள்ளார். அங்கு, மதுபோதையில் வருகைதந்த சுப்பிரமணி (வயது 50) என்பவன், சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளான்.
மேலும், சிறுமியை கட்டிப்பிடித்து அத்துமீறிய கொடூரன், கீழே தள்ளி விட்டுள்ளான். நொடிப்பொழுதில் சிறுமியை கீழே தள்ளிவிட்டு அட்டூழியம் செய்த கொடூரனை, மோகனா தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, மோகனாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளான்.
இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக மோகனா அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Namakkal child girl sexual torture police investigation