நீதிபதி முன்னிலையில் கண்ணீர் விட்டு கதறியழுத சிறுமிகள்.. அரங்கேறிய பெருந்துயரம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நைனாம்பாளையம் பகுதியை சார்ந்தவர் ரவீந்திரன் (வயது 42). இவர் சேலம் சுக்கம்பட்டி பகுதியில் உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து, விவசாயம் மற்றும் மாட்டு தீவன தொழில் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், ரவீந்திரன் தனது தோட்டத்தில் பணியாற்றி வந்த 15 வயது சிறுமி மற்றும் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானதை தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிறுமிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதனைப்போன்று நாமக்கல் பகுதியிலும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலி மந்திரவாதி கைது செய்யப்பட்டான். 

இந்த சிறுமிகள் நேற்று நாமக்கல் நீதிமன்றத்தில் தங்களின் வாக்குமூலத்தை பதிவு செய்த நிலையில், நீதிபதி முன்னிலையில் கண்ணீருடன் தங்களுக்கு நடந்த கொடூரத்தை கூறினார். இதனைத்தொடர்ந்து மீண்டும் இவர்கள் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், குற்றவழக்கில் கைதாகிய காமுகன்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal and Kallakurichi child sexual abuse case 29 November 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->