கள்ளக்காதல் ஜோடியை ஓடிவிட்டு நையப்புடைத்த மனைவி.!! நாகர்கோவில் விடுதியில் ருசிகர சம்பவம்.!!
nagarkovil couple enjoy in hotel wife attack illegal affair couple
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மணவாளக்குறிச்சி பகுதியை சார்ந்த வாலிபரொருவர் மீன்படி தொழில் செய்து வந்துகொண்டு இருந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நேரத்தில்., இவர்களின் வாழ்க்கையானது இன்பத்துடன் சென்று கொண்டிருந்த நேரத்தில்., வாலிபருக்கு அலைபேசியில் தவறிய அழைப்புகள் (மிஸ் கால்) வந்துள்ளது.
இதனை கண்ட வாலிபர் அந்த அலைபேசி எண்ணிற்கு மீண்டும் தொடர்பு கொண்டு பேச முயன்ற நிலையில்., மறுமுறையில் பேசிய பெண்ணொருவர் தவறுதலாக உங்களின் எண்ணிற்கு தொடர்பு கொண்டுவிட்டேன்., மன்னிக்கவும் என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார். இதற்கு பின்னர் குரங்கின் மனம் போல மரம் தாவ ஆசைப்பட்ட வாலிபர் மீண்டும் அந்த பெண்ணிற்கு தொடர்பு கொண்டு நட்பு ரீதியில் பேச துவங்கினார்.
இந்த நிலையில்., தனக்கு திருமணம் முடிந்துவிட்டது என்ற செய்தியை மறைத்து பேச துவங்கிய வாலிபரின் பேச்சில் மயங்கிய பெண்ணும் - வாலிபரும் பேசி வந்த நிலையில்., இருவரும் அடிக்கடி அலைபேசியில் தொடர்பு கொண்டு நட்பு ரீதியில் பேச துவங்கியுள்ளனர். இந்த நிலையில்., இருவரும் நட்பு ரீதியில் பேசி வந்த சமயத்தில்., பெண் தனது கணவரை இழந்து தனிமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடியில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பெண்ணிற்கு ஆறுதலை அளிப்பது போல பேசி வந்த வாலிபனிடம் பெண் சாதாரணமாக பேச துவங்கிய நிலையில்., அந்தரந்த தகவலை பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு நட்பு வளர்ந்துள்ளது. பின்னர் உன்னையே நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை விடவே., இதனை ஏற்ற பெண் நேரில் சந்தித்து பேச விரும்பியுள்ளார். இதனையடுத்து பெண்ணை அங்குள்ள காவல் கிணற்று பகுதிக்கு வரச்சொல்லியுள்ளார்.
இதனை ஏற்ற பெண் அங்கு வந்த நிலையில்., அங்குள்ள தனியார் விடுதியறைக்கு அழைத்து சென்று திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார். இந்த முதல் சந்திப்பிற்கு பின்னர் இவர்களின் சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்து வந்த நிலையில்., தனிமையில் பல முறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த சமயத்தில்., வாலிபரின் நடவடிக்கையானது அவரின் மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்., அடிக்கடி வெளியூர் சென்று வருவதாக கூறி சென்று வரும் நிலையில்., இவரை கண்காணிக்கும் படி அவரின் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து உறவினர் ஒருவர் வாலிபரை கண்காணித்த நிலையில்., வீட்டில் இருந்து வெளியூர் செய்வதாக கூறி கிளம்பிய நிலையில்., அங்குள்ள காவல்கிணறு விடுதியறைக்கு செல்வது தெரியவந்துள்ளது. இவருடன் பெண் செல்வத்தையும் சேர்த்து கண்டுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர் இது குறித்து வாலிபரின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் உடனடியாக ஆவேசத்துடன் விடுதிக்கு சென்ற நிலையில்., உடன் தனது உறவினர்களையும் அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள அனைத்து அறைகளையும் சோதனை செய்த நிலையில்., கணவன் - கள்ளகாதலியுடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருப்பதை கண்டுள்ளார்.
இதனையடுத்து கணவனை சரமாரியாக அடித்து துவைத்த மனைவியை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோட முயற்சித்த நிலையில்., இருவரையும் பெண் சரமாரியாக நையப்புடைத்தார். இதனையடுத்து இருவரையும் உறவினர்கள் சேர்த்து புலந்து கட்டினார். பின்னர் இது குறித்த தகவலானது காவல் துறையினருக்கு தெரியவரவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருதரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
nagarkovil couple enjoy in hotel wife attack illegal affair couple