காதல் திருமணம் முடிந்த 2 நாட்களில் கடத்தப்பட்ட மணமகன்.. பெண் குடும்பத்தினருடன் போராட்டம்.!
NAGAPATTINAM VEDARANYAM LOVE MARRIED MAN KIDNAPPED BY RELATIONS
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் உள்ள பஞ்சநதிக்குளம் கிராமத்தை சார்ந்தவர் சுமதி. இதே கிராமத்தை சார்ந்தவர் செல்வக்குமார். இவர்கள் இருவரும் ஐந்து வருடமாக காதலித்து வந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி மலேஷியாவில் இருந்து செல்வகுமார் ஊருக்கு திரும்பியுள்ளார்.
ஊருக்கு திரும்பிய மறுநாளே தனது காதலியை கரம்பிடித்து நிலையில், இவர்களின் திருமணத்திற்கு செல்வகுமாரின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் கிராம பஞ்சாயத்து கூட்டப்பட்டு, கடந்த 18 ஆம் தேதி வேதாரண்யத்தில் வைத்து இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு பேசி முடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 18 ஆம் தேதி பதிவு திருமணம் செய்ய வந்த செல்வகுமாரை, அவரின் உறவினர்கள் கடத்தி சென்றதாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக சுமதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லாத நிலையில், அவரது உறவினர்களுடன் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்னர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, சுமதி மற்றும் அவரின் உறவினர்களை கலைந்து செல்ல வைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
NAGAPATTINAM VEDARANYAM LOVE MARRIED MAN KIDNAPPED BY RELATIONS