காதல் வலையில் வீழ்த்தி சிறுமி பாலியல் பலாத்காரம்.. காமுகன் அட்டகாசம்.!
Nagapattinam Thittacheri girl sexual abused by Drama Lover Police Investigation
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டசேரி வாழமங்கலம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் பாரதி மோகன். இவரது மகன் பிரபாகரன் (வயது 21). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவனுக்கும், இதே பகுதியை சார்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்படவே, சிறுமியை காமுகன் காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். இதனையடுத்து, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான்.
இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில், சிறுமியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த பெற்றோர் சிறுமியிடம் விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து, பிரபாகரன் காதல் வார்த்தை கூறி அத்துமீறியதை சிறுமி தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் நாகபட்டினம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்..
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை, இயற்கையான பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தை பாதுகாத்திடுங்கள்.
English Summary
Nagapattinam Thittacheri girl sexual abused by Drama Lover Police Investigation