கொரோனாவின் கோரப்பிடியில் நாடாளுமன்ற உறுப்பினர்.. கண்ணீரில் தொகுதி மக்கள்.!!
Nagapattinam MP test positive corona virus
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் களப்பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டது. இதில், பல அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கூட பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அறிகுறியற்ற கொரோனா உறுதியான நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனையானது செய்யப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Nagapattinam MP test positive corona virus