நாங்குநேரி சம்பவம் : பாதிக்கப்பட்ட மாணவரை நேரில் நலம் விசாரித்த எம்.பி. கனிமொழி.!! - Seithipunal
Seithipunal


நாங்குநேரி சம்பவம் : பாதிக்கப்பட்ட மாணவரை நேரில் நலம் விசாரித்த எம்.பி. கனிமொழி.!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் சமீபத்தில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

படுகாயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இது தொடர்பாக கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இன்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சந்தித்து, உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தேன். 

குணமடைந்து வரும் அவர்கள் விரைவில் வீடு திரும்பி, தங்களது படிப்பை தொடர விழைகிறேன். நடந்த துயரச் சம்பவத்திலிருந்து, மனவலிமையோடு மீண்டு வரும் அக்குடும்பத்துடன் துணை நிற்பதாக உறுதியளித்தோம்" என்று பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp kanimozhi visit nanguneri school student


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->