மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
Motorcycle accident in tiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மணவூர் சாலை பகுதியை சேர்ந்தவர் கிரண் குமார் (30). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கிரண் குமார் வழக்கம் போல் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது சின்னம்மாபேட்டை பகுதி அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கிரன்குமார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கிரண் குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிரண்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருவாலங்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Motorcycle accident in tiruvallur