திருச்சி : தாயிடம் வாக்குவாதம் செய்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் - ஆத்திரத்தில் தாய் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


தாயிடம் வாக்குவாதம் செய்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் - ஆத்திரத்தில் தாய் செய்த கொடூரம்.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் அருகே அரியனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ். சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வரும் இவருடைய மனைவி மஞ்சுளா. இவர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஹேமேஷ் என்ற மகன் உள்ளார். 

இதற்கிடையே மஞ்சுளாவிற்கு சிறிது மனநிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவர் ஊர்க்காவல் படை பணிக்கு செல்லாமல் லால்குடி அருகே தாளக்குடியில் உள்ள அவரது தாய் அன்னக்கிளி வீட்டில் கடந்த ஒரு மாதமாக அவர் தங்கியிருந்து, திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில், மஞ்சுளா கடந்த வியாழக்கிழமை யாரிடமும் சொல்லாமல் தனது தாய் வீட்டில் இருந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க அரியனாம்பேட்டைக்கு வந்துள்ளார். நீண்ட நேரமாக மகளைக் காணவில்லை என்று தாய் அன்னக்கிளி தேடிக்கொண்டு அங்கு வந்துள்ளார். 

அதன் பின்னர் அன்னக்கிளி, மஞ்சுளாவை மீண்டும் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வருமாறு  அழைத்துள்ளார். அதற்கு மஞ்சுளா, சிகிச்சைக்கு செல்ல மறுத்துள்ளார். இதனால் தாய்க்கும், மகளுக்கும் இடையே அன்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் தூங்கியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை தூங்கி எழுந்த அன்னக்கிளி, வீட்டில் கிடந்த கல்லை எடுத்து மஞ்சுளாவின் தலை மீது போட்டு கொன்று விட்டு தொட்டியம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதையறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அன்னக்கிளியை கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother arrested for kill daughter in trichy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->