திருமுல்லைவாயில் அருகே வாலிபர் தற்கொலை - துக்கத்தில் தாய் எடுத்த விபரித முடிவு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் சாந்திபுரம் நான்காவது தெருவைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவர் அம்பத்தூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  தனது மகன் லோகேஷ் என்பவருடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை பரமேஸ்வரி வழக்கம்போல் வேலைக்குச் சென்றதையடுத்து அவரது மகன் லோகேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதற்கிடையே பணிக்குச் சென்ற பரமேஸ்வரி இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் லோகேஷ் தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் பேரில் போலீசார் வருவதற்குள் பரமேஸ்வரி மகன் இறந்த தூக்கம் தாளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் போலீசார் லோகேஷ் மற்றும் பரமேஸ்வரியின் உடலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் லோகேஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், காதல் தோல்வியால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. 

மேலும், மகன் இறந்த துக்கம் தாங்காமல் பரமேஸ்வரியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இருப்பினும் போலீஸார் தாய், மகன் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு விதமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother and son sucide in chennai thirumullaivayil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->