பூட்டிய வீட்டில் இறந்த மகளுடன் 3 நாட்கள் தனியாக இருந்த தாய்! பின்னணியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


திருவெற்றியூர், மணலி பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் (வயது 84) போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணியாற்றிய இவரது கணவர் உயிரிழந்து விட்டார். 

இவரது மகள் ஷீலா (வயது 55). இவர் தாயுடன் இருந்தார் ஜாஸ்மின் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை மகள் ஷீலா திருமணம் செய்து கொள்ளாமல் தாயை கவனித்து வந்தார். 

இருவரும் தந்தையின் பென்ஷன் பணத்தை வைத்து வாழ்ந்து வந்தனர். கடந்த 3 நாட்களாக வீட்டில் இருந்து ஷீலா வெளியே வராமல் வீடு பூட்டியே கிடந்தது. 

இந்நிலையில் ஷீலா வீட்டில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் ஷீலா உயிரிழந்த நிலையில் கிடந்தார். 

அழுகிய நிலையில் இருந்த அவரது உடலின் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட தாய் ஜாஸ்மின் என்ன செய்வது என தெரியாமல் அமர்ந்து கொண்டிருந்தார். 

இதனை அடுத்து போலீசார் ஷீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பரிசோதனையில் ஷீலா உயிரிழந்து 3 நாட்கள் இருக்கும் என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது ஜாஸ்மின் மகள் இறந்துவிட்டால் என்பது தெரியாமல் இருந்தது தெரியவந்தது. 

ஷீலா எப்படி உயிரிழந்தார் என போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் இறந்தது தெரியாமல் தாய் 3 நாட்கள் உடலை வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother alone with daughter dead body 3 days


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->