மொபட் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் மொபட்மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள லக்கமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி(77). இவர் நேற்று முன்தினம் மொபடில் வெள்ளக்கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பள்ளி வாகனம் ஒன்று பழனிசாமி மீது மோதியது.

இதில் கீழே விழுந்த பழனிசாமி பலத்த காயமடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழனிசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Moped school van in Tiruppur


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->