மொபட் மீது லாரி மோதி விபத்து.! கணவன் கண் முன்னே மனைவி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டம் பரப்பு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (55). இந்நிலையில் நேற்று மாலை கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் வெங்கமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பெரியசாமி மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கண்ணம்மாளின் தலையின் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கண்ணம்மாள் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் பெரியசாமி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கொடுமுடி போலீசார், உயிரிழந்த கண்ணம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moped lorry collision in erode


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->