மொபட் மீது லாரி மோதி விபத்து - முதியவர் பலி - Seithipunal
Seithipunal


ஆலங்குளம் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர் குளம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைக்கனி (62). இவர் அதே பகுதியில் சிறிய பெட்டிக்கடையில் வைத்து நடத்தி வந்தார்.

இவர் கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மொபாட்டில் ஆலங்குலத்திற்கு சென்று விட்டு, மீண்டும் கழநீர்குளம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது எதிரே வந்த மணல் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பிச்சைக்கனி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பிச்சைக்கனி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த பிச்சைக்கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moped lorry accident in thenkasi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->